Latest News
ஈழப்போராட்ட வரலாற்றை தெரிவிக்கும் திரைக்காவியமான “தேன் கூடு ” திரைப்படம் முக்கிய பிரமுகர்களுக்காக 02.02.2012 அன்று பிரசாத் ஆய்வக திரையரங்கில் திரையிடப்பட்டது.
1984-இல்இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடி என்ற பசுமை நிறைந்த தமிழ் கிராமம். சிங்கள வெறியர்களால் சூறையாடப்படுகிறது. அந்த கிராம அழிவிலிருந்து ஒரு ஈழ விருட்சம் வீரமாய் துளிர்விடுகிறது.. அதன் போராட்டக் கதை 2009 முள்ளிவாய்க்கால் வரை தொடர்கிறது.. முடிவே வரலாறு….. இல்லை அது முடியாத வரலாறு என தேன் கூடு திரைப்படம் திசைக்காட்டுகிறது
தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன் முறைய ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு “தேன் கூடு” திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் பற்றிய முழு நீள தமிழ்த் திரைப்படம் “தேன் கூடு” பெப்ரவரி திங்களில் உலகமெங்கும் வெளியாகிறது.. இத்திரைப்படத்தில் கதை நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான “1999″ நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் கதை நாயகியாக நவீனா… Read More »




